districts

img

மாவத்தூர், கீரனூர், வாழ்வார்மங்கலம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

கரூர், நவ.3- கரூர் மாவட்டம் மாவத்தூர் ஊராட்சி யின் கிராம சபை கூட்டம் களுத்தரிக்கப் பட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில் மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரபாக்குமார் வரவேற்று பேசி னார்.  ஒன்றிய கவுன்சிலர் பி.ராமமூர்த்தி, கடவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி  அலுவலர் ராணி, ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிராம பொதுமக் கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீரனூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் கீரனூர் கிராம சேவை மைய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வி.மகாலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.மாணிக்கம் வரவேற்று பேசினார். மாவட்ட கவுன்சிலர் டி.நந்தினிதேவி, ஒன் றிய கவுன்சிலர் சி.மகாலட்சுமி,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலர் பி.பிச்சைமணி நன்றி கூறினார்.  வாழ்வார்மங்கலம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் வாழ்வார்மங்கலம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.சரவணன் தலைமை வகித்தார். துணை தலைவர் பி.கோபி வரவேற்று பேசினார்.  இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் கந்தன் நன்றி கூறினார்.