districts

img

முள்ளிப்பாடி ஊராட்சியில் காசநோய் கணக்கெடுப்பு பணி

கரூர், டிச.17 - கரூர் மாவட்டம் சார்பாக கடவூர் ஊராட்சி  ஒன்றியம், முள்ளிப்பாடி ஊராட்சியில் காச நோய் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. செட்டியபட்டியில் நடைபெற்ற துவக்க  விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் தலைமை வகித்தார். முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் டி.மதன், காசநோய் பரவும் வழிமுறைகள், பாதுகாப்பு குறித்து பேசினார். சுகாதார ஆய்வாளர் முத்துராமன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். இரண்டு தன்னார்வ லர்கள் முள்ளிப்பாடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் காசநோய் குறித்த கணக்கெடுப்பு பணியை தொடங்கி னர். இந்த பணிகள் 20 நாட்கள் நடைபெற உள்ளது. இல்லம் தேடி வரும் இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் கூறினார்.