கரூர், பிப்.24- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரூர் மாநகராட்சி 41-ஆவது வார்டில் போட்டியிட்ட எம்.தண்டபாணி மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்க வீடு, வீடாக சென் றார். அப்போது பொது மக்கள் இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித் தும், தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்பு அளித்தனர். அப்போது எம்.தண்ட பாணி பேசியதாவது, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டணி கட்சி மற்றும் என் மீதும் நம்பிக்கை வைத்து எனக்கு அதிக அளவிலான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். உங்க ளது கோரிக்கைகளை உட னுக்குடன் கேட்டறிந்து, அதை நிறைவேற்றுவதற்கு தீவிர நடவடிக்கை மேற் கொண்டு உடனுக்குடன் திட்டங்களை பெற்றுத் தரு வதற்கு மாமன்றத்தில் குரல் கொடுப்பேன். எப்போதும் உங்களுக்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன், என்னை நீங்கள் எப்போதும் சுலபமாக தொடர்பு கொள்ளலாம். நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன் என்று அவர் பேசினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஹோச்சுமின், திமுக 41-ஆவது வார்டு செயலாளர் விஸ்வநாதன், மாநகர் குழு உறுப்பினர்கள் வி.சக்தி வேல், கிளை செயலாளர் சதீஸ், கணேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு அலுவலகத் தில் கரூர் மாமன்ற கவுன் சிலர் எம்.தண்டபாணி, கட்சி யின் மூத்த தலைவர் ஜி. ரத்தினவேலுவை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப் போது மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி.ஜீவா னந்தம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.