கரூர், டிச.28- அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட மாநாடு குளித்தலையில் நடை பெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட் டத் தலைவர் ஓ.கே.கண்ணதாசன் தலைமை வகித்தார். குளித்தலை ஒன்றியச் செயலாளர் எம்.சிவா வர வேற்றுப் பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சந்திரன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமுக மது, விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் கே.சக்தி வேல் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாவட்டச் செயலாளர் இரா. முத்துச்செல்வன், மாநிலப் பொரு ளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் சிறப் புரையாற்றினர். மாநாட்டில், மாவட்டத் தலை வராக ஓ.கே.கண்ணதாசன், செய லாளராக பி.ராஜூ, பொருளாள ராக பி.வேல்முருகன், துணைத் தலைவர்களாக இரா.முத்துச்செல் வன், பி.செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்களாக பி.பட்டு, எம்.ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய் யப்பட்டனர். தமிழ்நாடு அரசு உடனடியாக விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண் டும். கரூர் மாவட்டம் கிருஷ்ணராய புரம் வட்டம் சிந்தலவாடி ஊராட் சிக்குட்பட்ட பட்டியலின மக்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டா வுக்கான நிலத்தை உடனடியாக அளந்து, அத்துக்கல் நட்டு பய னாளிகளுக்கு வழங்க வேண்டும். பிள்ளாப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொம்பாடிபட்டி தாழ்த்தப் பட்ட மக்களுக்கு பட்டாவும், நில மும் உடனடியாக வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 30 அன்று கரூர் மாவட்ட ஆதி திராவிடர் அலுவலகம் முன்பு மாபெ ரும் காத்திருப்பு போராட்டம் நடத்து வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.