கரூர், டிச.30 - கரூர் தீயணைப்பு மீட்பு பணித்துறை மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியின் சாரண-சாரணியர் மற்றும் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு ‘தீ தடுப்பு மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கை’ செயல் முறை விளக்கம் பரணி பார்க் சாரணர் திடலில் நடை பெற்றது. தீயணைப்பு மீட்புப் பணித் துறை கரூர் மாவட்ட அலு வலர் ஆர்.ஜெகதீஸ் உத்தர வுப்படி, நிலைய அலுவ லர் சி.திருமுருகன் தலைமை யிலான குழுவினர் செயல் முறை விளக்கம் செய்து காண்பித்தனர். பரணி பார்க் சாரண, சாரணியர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள், இந்த மீட்பு நடவடிக்கையை தீய ணைப்பு மீட்பு பணித்துறை குழுவினரிடமிருந்து கற்றுக் கொண்டனர். பரணி பார்க் கல்விக் குழும தாளாளரும், பரணி பார்க் சாரணர் மாவட்ட தலை வருமான எஸ்.மோகன ரங்கன், கரூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் செல்வகுமார், பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர்கள் பத்மாவதி மோகனரங்கன், சுபாஷினி, பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வரும், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையருமான முனைவர் சி.ராமசுப்பிர மணியன், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல் வர் பி.சாந்தி, பரணி வித்யா லயா முதல்வர் எஸ்.சுதா தேவி, பரணி பார்க் முதல்வர் கே.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.