districts

img

காலிப் பணியிடங்களை நிரப்பிடுக! மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன.13- காலியாக உள்ள மருந் தாளுநர் பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு அனைத்து மருந் தாளுநர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் அரசு  மருத்துவக்கல்லூரி மருத் துவமனை முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செய லாளர் ஆர்.பிரேம்குமார் வர வேற்றார். அரசு ஊழியர்  சங்க மாநில துணைத் தலை வர்கள் மொ.ஞானத்தம்பி, எம்.செல்வராணி, மாவட்டத்  தலைவர் எம்.சுப்பிர மணியன், மாவட்டச் செயலா ளர் கெ.சக்திவேல் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். மாவட்டப் பொருளாளர் வி.ஞானபாரதி நன்றி கூறி னார்.  ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நலன் கருதி 1350 க்கும் மேற்பட்ட காலியாக உள்ள மருந்தாளுநர் பணி யிடங்களை மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் மூலம்  உடனே நிரப்பிட வேண்டும்.  39 நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலைய மருந்தாளு நர்களை பணி வரன்முறை செய்திட வேண்டும். மருந்தா ளுநர்கள், தலைமை மருந்தா ளுநர்கள், மருந்து கிடங்கு  அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.