கரூர், டிச.15- கிராம மக்களின் கோரிக் கைகளை நிறைவேற்றுவதே எனது முதல் பணி என்று பொருந்தலூர் ஊராட்சி தலைவர் சத்யா ராமச்சந்தி ரன் தெரிவித்துள்ளார். பொருந்தலூர் ஊராட்சி முழுவதும், குடிநீர் பிரச்ச னைகள் போர்வெல் மூலம் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள் ளது. ஒரு சில கிராமப் பகுதி களுக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்து, மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய அலு வலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்ற நடவடிக்கை எடுக் கப்படும். 15-ஆவது நிதிக் குழு சார்பில் 7 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் ஜெயம் ஸ்வீட்ஸ் முதல் வடக்கு நோக்கி, பாலம் வரை மழை நீர் வடிகால் அமைத்து பணி கள் நிறைவடையும் நிலை யில் உள்ளது. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள் ளது. மேலும் ஊராட்சி நிதி யிலிருந்து புதிய சிமெண்ட் சாலையும் அமைக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு கிரா மங்களிலும் மக்களின் தேவைகளை ஒவ்வொன் றாக விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தன்னை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வழங்கலாம். மேலும் பொருந்தலூர் ஊராட்சியை கரூர் மாவட்டத் தில் சிறந்த ஊராட்சியாக வும், அனைத்து வகை யிலும் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாகவும் மாற்று வதே எனது குறிக்கோள் என அவர் கூறியுள்ளார்.