districts

நிலுவைத்தொகை வழங்க தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

 கரூர், மார்ச் 23- தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் ஆப்ரேட்டர், தூய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் (சிஐடியு) கரூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியச் செயலாளர் சீரங்கன் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 7-ஆவது ஊதிய குழுவின் அடிப்படையில் நிலுவைத்தொகை உடனடியாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி முடித்து சிறப்பு காலம் வரை ஊதியம் பெரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தக் வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து மாதம் ஊதியம் ரூ.9 ஆயிரம் காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.