districts

கட்டுமானத் தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

கரூர், ஏப்.22 - கரூர் மாவட்ட தொழி லாளர் துறை ஆன்-லைன் மூலம் பதிவு செய்து மற்றும்  நேரடியாக பதிவு செய்து பணப் பயன் கோரிய மனுக்கள் மீது  உடனடி நடவடிக்கை எடுத்திட கோரி வெள்ளிக் கிழமை (ஏப்.22) கரூர் வெண்ணை மலையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு கரூர்  மாவட்ட கட்டுமான தொழிலா ளர் சங்கம் (சிஐடியு) சார்பில்  ஆர்ப்பாட்டம் நடத்திட அறி விக்கப்பட்டது. ஏப்.21 அன்று தொழி லாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையில் நடைபெற்ற சுமூக பேச்சுவார்த்தையில், கட்டுமான தொழிலாளர் சங்கத் தின் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது, மாவட்ட தலைவர் ப.சரவணன், மாவட்ட நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.  தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) தேங்கி யுள்ள பணப்பயன் கோரிய  மனுக்களை 2022 ஏப்ரல் மாத  இறுதிக்குள் பார்வையிட்டு  உரிய தொழிலாளர்களுக் கும், வாரிசுகளுக்கும் பணப் பயன்களை வழங்குவதற் கான ஏற்பாடு செய்யப்படும். ஆன்-லைன் மூலம் பதிவு செய்து அப்டேசன், ரெனி வல், புதிய பதிவுகளை ஏப்ரல் மாத இறுதிக்குள் அப்ரூவ்டு கொடுக்கப்படும் என  வாக்குறுதி அளித்தனர். ஓய்வூதியதாரர்களுக்கு ஆயுள் சான்று கொடுக்க ஆன்லைன் பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி னர். இந்த பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்ட தையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்த னர்.