திறன் மேம்பாட்டு பிரிவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கருக்கு விருது வழங்கப்பட்டது. இதையறிந்த புகளூர் காகித ஆலையில் பணிபுரியும் ராமராஜ்-பிரியா தம்பதியினரின் மகள் 8-ஆம் வகுப்பு படிக்கும் ரோஷினி மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பினார். மாணவியின் கடிதத்தை படித்த மாவட்ட ஆட்சியர், மாணவியை நேரில் வரவழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.