districts

img

கரூரில் 50 பைசாவிற்கு பிரியாணி: அலைமோதிய மக்கள் கூட்டம்

கரூர், ஆக.27 - கரூர் காந்திகிராமத்தில் தந்தூரி ட்ரைப்ஸ் பேமிலி ரெஸ்ட்ரண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 பைசாவிற்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. இந்த பிரியாணியை வாங்குவதற்கு பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.  இதுகுறித்து தந்தூரி ட்ரைப்ஸ் பேமிலி ரெஸ்டாரண்டின் உரிமை யாளர்கள் ஜெ.பிரதீப் கண்ணன், பா.மஞ்சுளா ஆகியோர் கூறுகை யில், “நாங்கள் நடத்தி வரும் ஹோட்டல் துவங்கி ஓராண்டு முடிவடைந்துள் ளது. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அதை கொண்டாடும் வகையில், பொதுமக்களின் ஆதரவோடு இந்த விழாவை  கொண்டாட வேண்டும். அவர்களுக்கு சிறப்பான முறையில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக 50 பைசாவிற்கு பிரியாணி வழங்க முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் 50 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் கடைக்கு வந்து மகிழ்ச்சியுடன் பிரி யாணியை வாங்கிச் சென்றனர்” என்றனர்.

;