கரூர், ஜூன் 18 - குளித்தலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை அமைக்க வேண்டும் எனக் கோரி தமிழக முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முத்துச் செல்வன் தமிழக முதலமைச் சருக்கு அனுப்பிய கோ ரிக்கை மனுவில் கூறியிருப் பதாவது: கரூரில் செயல்பட்டு வந்த அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையாக தரம் உயர்த்தப் பட்டது. பின்னர், கரூருக்கு அடுத்தபடியாக இரண்டா வது பெரிய நகரமான குளித் தலையில் உள்ள அரசு மருத் துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்த அன்றைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து குளித் தலை அரசு மருத்துவமனை யில் அனைத்துப் பிரிவு களுக்கான புதிய கட்டிடங் கள் கட்டப்பட்டன. ஆனால் அன்றைய அதிமுக அரசு, மாவட்ட தலைமை மருத்துவமனை யாக குளித்தலை அரசு மருத் துவமனையை அறிவித்து விட்டு, அரசாணை வெளி யிடாமலும் தலைமை மருத்து வமனையாக செயல்படுத்தா மலும் விட்டுவிட்டது. இணையதளத்திலும் குளித்த லைதான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை என பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
2021 ஏப்ரலில் அமைந்த மு.க.ஸ்டாலின் தலைமையி லான திராவிட முன்னேற்றக் கழக அரசு, அக்டோபர் 26 ஆம் தேதி, குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது. அரசாணை வெளியிட்ட பின்பும், குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையாக செயல்படுத்த, தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு மாறாக தற்போது அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களி டம், “கரூரில் செயல்பட்டு வந்த பழைய அரசு மருத்துவ மனையை மீண்டும் மாவட்ட தலைமை மருத்துவமனை யாக செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு இணையாக தரம் உயர்த்தி செயல்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளதாக” தெரிவித்திருக்கிறார். எனவே குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனை யாக தரம் உயர்த்தி செயல் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், குளித் தலை பொதுமக்கள் சார்பி லும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி யிருந்தார்.