கரூர், ஜூலை 16 - கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி கிராமத் தில் ஆதிதிராவிடர் மக்கள் மற்றும் இதர சாதியினர் என நூற்றுக்கணக் கான குடும்பங்கள் வசித்து வரு கின்றன.
ஊர் பொதுவில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் புதி தாக கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஜூலை 12 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் தெரு பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.
ஜூலை 13 அன்று காலையில் மாற்று சாதியைச் சேர்ந்த சிலர், ஆதிதிராவிடர் மக்கள் வைத்தி ருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து விட்டனர். ‘இதனை ஏன் கிழித் தீர்கள்’ என்று சம்பந்தப்பட்ட ஆதி திராவிடர் மக்கள் சென்று கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே பிரச்சனை வரும் சூழ்நிலை உருவானது.
இதனால் இரு தரப்பிலும் சுமூகமாக பேசி, ‘பிளக்ஸ் பேனரை கிழித்தது தவறுதான். இனிமேல் இது போன்று நடக்காது’ என்றும், ‘இப்பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’ என்றும் மாற்று சாதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாதிக்கப் பட்ட ஆதி திராவிடர் மக்கள் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், ஜூலை 14 அன்று காலை டீக்கடைக்கு சென்ற ஆதி திராவிடர் சமூக மக்களை தகாத வார்த்தைகளால் பேசியும், 10 வயது சிறுவன் டீக்கடையில் பால் வாங்க சென்றபோது மூன்றுக்கும் மேற்பட்ட சாதி ஆதிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கியும் உள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சிறு வன் அழுது கொண்டே வந்து, தன் மீது தாக்குதல் நடத்தியது பற்றி தெரிவித்துள்ளார். உடனே ஆதி திராவிடர் மக்கள், “எங்கள் பகுதி யில் வைத்திருந்த பேனரையும் கிழித்து விட்டு, இந்த சிறுவனை யும் தாக்கி உள்ளீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? எங்களுக்கு தீர்வு வேண்டும். ஏன் அடித்தீர்கள்” என்று கேட்க சென்றனர்.
இதையடுத்து சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆதி திராவிடர் மக்களின் வீடுகளுக்குள் சென்று கொலை வெறித் தாக்கு தல் நடத்தி உள்ளனர். இதில் 15-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் படுகாயமடைந்து குளித் தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ, குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன் ஆகியோர் குளித் தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப் பட்ட ஆதிதிராவிடர் மக்களை நேரில் சென்று பார்த்து, சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் சமீப கால மாக சாதிய தாக்குதல்கள் அதி கரித்து வருகின்றன. குறிப்பாக குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த மூன்று மாதத்தில் பட்டியல் வகுப்பு மக்கள் மீது சாதி ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தோர் திட்ட மிட்டு தொடர்ந்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இச்செயல்கள் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்காது. இது போன்ற செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்டக் குழு வன்மை யாக கண்டிப்பதுடன் கரூர் மாவட்ட நிர்வாகம் பட்டியல் வகுப்பு மக்க ளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலைக்குரிய விஷய மாக பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம், காவல்துறை கடுமையான நட வடிக்கைகளை எடுக்காமல் இருப்பதுதான். குளித்தலை அரு கில் உள்ள ஈச்சம்பட்டியில் பட்டியல் வகுப்பு மக்கள், சாதி ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்தோர் நடத்திய திருவிழாவை வேடிக்கை பார்த்த போது, பட்டாசை பற்ற வைத்து மேலே போட்டுள்ளனர்.
இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப்பட்டியில் ஆதிதிராவிடர் மக்கள் மீது சாதி ஆதிக்க சமூகத்தினர் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ள னர். தற்போது பொய்யாமணி கிரா மத்தில் நடந்த கும்பாபிஷேகத்தில் பிளக்ஸ் பேனரை கிழித்தது மட்டுமின்றி, ஆதிதிராவிடர் மக்கள் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் காவல் துறையினர் கண் முன்னே நடந் துள்ளது. குளித்தலை காவல் துறை கடைசியில் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளது.
குறிப்பாக, குளித்தலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பட்டி யல் வகுப்பு மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் புகார் அளித்தால், தாக்கு தல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், எதிர்த் தாக்கு தல் நடத்த முடியாமல், தாக்குதல் களில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்வதற்காக பட்டியல் வகுப்பு மக்களின் மீதே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதியக் கூடாது
மேற்கண்ட மூன்று சம்பவங்களி லுமே காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீது வழக்குப் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை குளித்தலை காவல் துறை, குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் கைவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தாக்குதல் நடத்தி யவர்கள் மீது கடும் நடவடிக்கை களை எடுக்க வேண்டும்.
காவல்துறை இரு தரப்பிலும் வழக்குப் பதிவு செய்வதால்தான் சாதிய மோதல்கள் அதிகம் நடக்க காரணமாக உள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பா ளர் ஆகியோர் இதுபோன்ற பிரச்சனைகள், இனிமேல் நடக்கா மல் தடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கும், அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.