கரூர், அக்.11 - சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளிக்கு ஆண்டு தோறும் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்குவதென சிஐடியு கரூர் மாவட்டக் குழு முடிவு செய்துள்ளது. சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலை மையில் திங்களன்று நடை பெற்ற மாவட்டக் குழு கூட்டத் தில், மாநிலக் குழு உறுப்பி னர் ஆறுமுகத்திடம் முதல் தவணையாக ரூ.71 ஆயிரம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட சிஐடியு நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் அனை வரும் தங்களை ஒரு நன்கொடையாளராக பதிவு செய்து, தலா ரூ.1000 நன் கொடை அளித்தனர். மீதித் தொகையை சிஐடியு மாநில மாநாட்டில் வழங்குவதோடு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்குவதை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் முரு கேசன், மாவட்ட நிர்வாகி கள் சரவணன், அங்கன் வாடி சாந்தி, டாஸ்மாக் கிரு ஷ்ணமூர்த்தி, தனபால் (மின்சாரம்), பாலசுப்ர மணியம் (போக்குவரத்து), அரவிந்த் (காகிதம்), ராஜே ஸ்வரி (கட்டுமானம்), தண்ட பாணி (பொது சங்கம்), ஹோசிமின் (தையல்) மற்றும் மாவட்டக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர். 41-வது கரூர் மாநகர் மன்ற உறுப்பினர் தண்ட பாணி மற்றும் காகிதபுரம் பேரூராட்சி, புகளூர் நக ராட்சி 22-வது வார்டு உறுப்பி னர் இந்துமதி அரவிந்த் ஆகியோர், இதுவரை தங்க ளுக்கு படியாக வழங்கப் பட்ட தொகையை நிர்மல் பள்ளி நிதிக்கு அளித்தனர்.