கரூர் எல்ஐசி அலுவலகம் கிளை 1 முன்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆயுள் காப்பீட்டு துறை (எல்ஐசி) நாட்டுடைமையான நாள் வாயிற்கூட்டம் நடைபெற்றது. எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் வி.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார். சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.