கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைவிளக்க புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் செவ்வாயன்று தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் எம். லியாகத், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதீன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, கல்லூரி தாளாளர் இராமகிருஷ்ணன், ஆகியோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை நான்காயிரத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.