districts

img

4 வழி சாலைக்கு நிலம்கொடுத்த விவசாயிகளுக்கு அரசு ஒதுக்கிய பணம் கேட்டு ஆட்சியரிடம் மனு

நாகர்கோவில், அக்.31- கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழி சாலை அமைக்க  அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு கேரளாவை போல்  இழப்பீடு கேட்டும் வழிகாட்டி பதிவேட்டின் அடிப்ப டையில் ஆறுதல் தொகை மற்றும் வட்டி வழங்க கேட்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுத்து முழக்கமிட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குமரி மாவட்ட குழு சார்பில் மனு கொடுக்கும்  ஆர்ப்பாட்டம் நாகர்கோ வில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது மாவட்ட தலைவர் எஸ். ஆர். சேகர்  தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, முன்னோடி விவசாயிகள் செண்பகசேகரபிள்ளை, புலவர் செல்லப்பா, தாணுபிள்ளை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் விஜி, வின்சென்ட், சின்னதம்பி மற்றும் ஆறுமுகம் பிள்ளை, திலீப், சுனில் குமார், பேதுரு உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  பாதிக் கப்பட்ட விவசாயிகளிடமிருந்து பெற்ற மனுக்கள் மாவட்ட ஆட்சி யரிடம் அளிக்கப்பட்டது.

;