நாகர்கோவில், ஜூன் 25- கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் முதல்நிலை பேரூ ராட்சிக்குட்பட்ட அச்சன்குளம் பகுதிக்கு புத்தனாறு கால்வாயை கடந்துதான் செல்ல வேண்டும். இக்கால்வாயை கடந்து செல்வதற்கு பாலம் உள்ளது. இப்பாலம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது மிக குறுகலான பாலமாக இருப்ப தால் பேருந்து, மகிழுந்து மற்றும் கனரக வாகனங்கள் பொது மக்களின் தேவைகளுக்காக இப்பாலம் வழியே செல்ல முடிவ தில்லை. மேலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் பாலம் வழியாக செல்லும்போது இந்த பாலம் குலுங்கும் நிலை நிலவுகிறது. எனவே நூற்றாண்டு கண்ட இந்த பழமையான கொட்டாரம் அச்சன்குளம் பாலத்தை இடித்து அகற்றி விட்டு அதற்கு பதிலாக விரிவான புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.