அருமனை, டிச.9- கன்னியாகுமரி மாவட்ட மலையோரக் கிராமங்களில் வனவிலங்குகளின் அட்டூழி யத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள னர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கடையால் பேரூராட்சி எல்லையான பத்துகாணி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாண வர் விடுதிகளில் நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பகுதி யானது கேரளாவின் திருவனந்தபுரம் மாவட் டத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆல யங்கள் உள்ளன. இருந்தாலும் வன விலங் குகளின் அச்சுறுத்தலும் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை அரசும் வனத்துறையும் சரிவர கண்டுகொள்ளாததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு காட்டு யானைகள் கிராமத்துக்குள் வந்து விவ சாய நிலங்களையும், தென்னை, கமுகு போன்ற மரங்களையும் உடைத்து சேதப்படுத் தின. வீடுகளின் கூரைகளையும் சேதப்படுத்தி உள்ளன. இதனால் அங்கு பதற்றமான நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தொடர்ந்து இச்சம்பவங்கள் நடந்து வரு கிறது. வன அதிகாரிகளிடம் பலமுறை முறை யிட்டும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. தொடர்ந்து மக்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படுகி்ற நிலை உள்ளது. இதனை தடுத்து நிறுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.