districts

வேளாண்மை உழவர் நலத்துறையில் இளைஞர் திறன் வளர்த்தல் பயிற்சி

நாகர்கோவில், மார்ச் 30- கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை யின்கீழ், கிராமப்புற இளைஞர்களை விவ சாயத்தில் ஈடுபடுத்தி வேலைவாய்ப்பு பெற்றிட ஊக்குவிக்கும் வண்ணம் ‘அங்கக வேளாண்மை உற்பத்தி யாளர்’ என்ற தலைப் பில் திறன்வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் தொ டங்கப்பட்டு உள்ளது. இப்பயிற்சி கிரு ஷ்ணன்கோவில் உழ வர்பயிற்சி நிலைய பயி லரங்கில்  30 நாட்கள்  தொடர்ந்து நடைபெ றும். ஏற்கனவே இப்ப யிற்சியில் சேர விருப்பம் தெரிவித்து பதிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படு கிறது. பயிற்சி வகுப் பினை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ். சத்திய ஜோஸ் துவக்கி வைத்து  பேசினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் அவ்வை மீனாட்சி திட்ட விளக்கவுரை நிகழ்த்தி னார். மேலும் அங்கக வேளாண்மை குறித்து விதைச்சான்று மற்றும் அங்ககத்துறை வேளா ண்மை உதவி இயக்கு நர் பயிற்சி அளித்தார்.