குழித்துறை, நவ.25- குழித்துறை பகுதியில் குடிநீர் வடிகால் வாரி யத்தின் சீர்கேட்டைக் கண் டித்தும் மற்றும் களியக்கா விளை- கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் பகுதியில் மரணக்குழிகளாகக் காட்சி யளிக்கும் சாலை சீரமைக் காத நெடுஞ்சாலைத் துறைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குழித்துறை நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய சாலைகள் சின்னா-பின்ன மாகக் காட்சியளிக்கிறது. மக்கள் நடந்து செல்வ தற்குக் கூட லாயக்கற்ற சாலைகளாக மாறிவிட்டது. சாலைகள் மரணக்குழிக ளாக மாறிவிட்டது. மோச மான நிலையில் உள்ள சாலகளை சீரமைக்க வலி யுறுத்தி குழித்துறை நகர்மன்ற அனைத்து உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தி லும் குடிநீர் வடிகால் வாரி யத்திலும் மனு கொடுத்த பிறகும் சீரமைக்கப்பட வில்லை என ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். குடிநீர் வடிகால்வாரி யம், நெடுஞ்சாலைத்துறை யின் மெத்தனத்தைக் கண் டித்து வாலிபர் சங்கத்தின் மார்த்தாண்டம் வட்டாரக் குழு சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே கிருஷ்ண ராஜ் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலா ளர் சர்தார் ஷா, நல்லூர் வட்டாரக் குழு உறுப்பினர் ஜான், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ரதிஸ், குழித்துறை நகர் மன்ற உறுப்பினர்கள் லலிதா, ஜூலியட் மெர்லின் ரூத், ஜினோ உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.