districts

img

தினசரி சந்தையின் மதில் சுவர் உடைப்பு சமூக விரோதிகளை போலீஸ் தேடுகிறது

அருமனை, பிப்.8- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சி தினசரி சந்தையின் மதில் சுவர் உடைக்கப்பட்ட சமூக விரோதிகளை போலீஸ் தேடி வருகிறது. அருமனை பேரூராட்சிக்கு சொந்த மாக பாக்கியபுரம் தினசரி சந்தை, பேரூ ராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டம், சமூக நலக்கூடம் செயல்பட்டு வரு கிறது.  இதன் பாதுகாப்புக்காக  மதில் சுவர் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோணத்துவிளை பகுதி மக்களின் போக்குவரத்து வசதிக்காக காலை 6மணி முதல் இரவு 8 மணி வரை சந்தையின் முன்புற மற்றும் பின்புறம் கேட்டுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் இரவு மூடப்படும்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு யாரோ சமூக விரோதிகள் சந்தை க்கு புகுந்து மதில் சுவரை இடித்துள்ளனர். புதன்கிழமை காலையில் வழக்கம்போல் அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து வந்தபோதுமதில் சுவர் இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து பேரூ ராட்சி செயலாளர் அருமனை போலீ சாருக்கு புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் அருமனை போலீசார் மதில் சுவரை இடித்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

;