கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில், 69ஆவது கூட்டுறவு வார விழா மார்த்தாண்டம் கே.கே.எம்.இன்டர்நேஷனல் அரங்கில், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் எச்.ஆர்.கவுசிக் தலைமையில் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜி.பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.