கடலூர், ஏப்.3 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளாக வீடு இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இது தொடர்பாக கிராம பொதுமக்கள் இலவச மனைப் பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ள நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் கிராமத்தில் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.