சிதம்பரம், ஜன. 23- இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வீராங்கனைகளை துணைவேந்தர் பாராட்டினார். பல்கலைக்கழகங்களுக்கு இடையே யான பெண்கள் கால்பந்து போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடை பெற்றது. இதில் மண்டல போட்டிகளில் வெற்றி பெற்ற 16 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விடையாடின. தென் மண்டல போட்டிகளில் வெற்றி பெற்ற அண்ணா மலைப் பல்கலைக்கழகம் உட்பட தமிழகத் தைச் சேர்ந்த 4 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன. இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் குருநாக்தேவ் பல்கலைக் கழகத்துடன் ஒரு கோல் கணக்கில் தோல்வியுற்றது. பின்னர் புள்ளிகளின் அடிப்படையில் 3ஆம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங் கணைகள், பயிற்சியாளர், இயக்குநர் ஆகியோரை பல்கலைக்கழக துணை வேந்தர் ராம.கதிரேசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்திலிருந்து பங்கேற்ற பல்கலைக்கழக அணிகளில் அண்ணா மலைப் பல்கலைக்கழக அணி மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.