கடலூர்,டிச.26- கடலூர் அருகே வெள்ளப் பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர். இதற்காக, கடலூர் வரு வாய் கோட்டாட்சியர் அலு வலகத்தில் வருவாய் கோட்டாட்சி யர் அதியமான் கவியரசு தலை மையில் கிராம பொது மக்களி டம் கருத்து கேட்பு கூட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற பொது மக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து, வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொது மக்கள் குண்டு சாலையில் திரண்ட னர். பின்னர் அங்கிருந்து ஊர்வல மாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். இந்த போராட்டம் குறித்து மக்கள் கூறியதாவது:- வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம். எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்ப தால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர். பிறகு, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து 15 பேர் கொண்ட குழுவை ஆட்சியரிடம் அழைத்து சென்று கோரிக்கை மனு கொடுத்தனர்.