கடலூர், ஜூன் 12- விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
அதில் புகையிலை தோட்டம் பகுதியில் உள்ள வடிகாலில் இருந்து கழிவுநீர் வெளி யேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகா தார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம்- மங்கலம்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீ சார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கு தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தி, கழிவுநீர் செல்வதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.