கடலூர், ஜூன் 13 - கடலூர் எம்.பி விஷ்ணு பிரசாத் தலைவர்களின் சிலைக்கு மாலை அணி வித்தார். இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மரு. விஷ்ணு பிரசாத் தேர்தல் வெற்றிக்கு பிறகு கடலூர் வந்த அவர் புதுப் பாளையத்தில் உள்ள அண்ணா சிலை, மஞ்சு குப்பத்தில் உள்ள அம்பேக் கர் சிலை , காமராஜர் சிலை, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைகளுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத் தினார்.
பின்னர் கூட்டணி கட்சியினருக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளில் தலை வர்களான திமுக சட்ட மன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகர செயலா ளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, காங்கிரஸ் மாவட்ட தலைவர் திலகர் , மாநில செயலாளர் ஏ.எஸ்.சந்திர சேகரன், சிபிஎம் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே. பக்கிரான், விசிக துணை மேயர் தாமரைச் செல்வன், மாநகர செயலா ளர் செந்தில், சிபிஐ மாவட்டச் செயலாளர் துரை, துணை செயலாளர் குளோப், மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.