கடலூர், நவ.4- கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். கடலூர் வண்டிப்பாளையம் அம்பேத்கார் நகரில் வசிப்பவர் மேரி. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மேரி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அருகாமையில் நின்று கொண்டிருந்த வரனீஸ்வரன் (5) என்ற சிறுவன் படுகாயம் அடைந் தான். உடனடியாக அக்கம்ப்பக்கத்தி னர் சிறுவனை மீட்டு கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.