districts

img

ராஜா முத்தையா மருத்துவமனைக்கு தாய் சேய் அவசர ஊர்தி

சிதம்பரம், செப். 10- சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய் சேய் அவசர ஊர்தியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். சிதம்பரம் ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 102 இலவச தொலைபேசி எண் கொண்ட  தாய், சேய் அவசர ஊர்தியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு அண்ணாமலை ப்பல்கலைக் கழக துணை வேந்தர் ராம. கதிரேசன் தலைமை தாங்கி னார்.  தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், மருத்துவமனை யில் ரூ 3 கோடியே 10 லட்சம் செலவில் அமைக்கப் பட்டுள்ள புதிய திறனறிவு பயிற்சி ஆய்வகத்தினையும் உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவினையும் ஆய்வு செய்து அங்கிருந்த மருத்து வர்கள் மற்றும் செவிலியர் பளிடம் அதன் செயல்பாடு கள் குறித்து விளக்கங்களை கேட்டார். மேலும் இதனை நல்ல முறையில் பராமரித்து ஏழை மக்களுக்கு தொடர்ந்து உதவி கிடைத்தி டும் வகையில் செய்ய வேண்டும் என மருத்துவர்க ளுக்கு அறிவுறுத்தினார்.  சிதம்பரம் நகர் மன்ற தலைவர் செந்தில் குமார் துணைத் தலை வர் முத்துக்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

;