districts

img

கடல் சீற்றத்தால் உருக்குலைந்த சுப உப்பலவாடி கடற்கரை

கடலூர்,டிச.10- தொடர் கடல் சீற்றத்தால் சுப உப்பல வாடி கிராம பகுதி கடற்கரை சேதம் அடைந்து வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. இதனால் கடலில் சுமார் 15 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்தது. மேலும் 50 முதல் 60 அடி தூரம் கடல் அலை முன்னோக்கி வந்து சென்றது. கடலூர் அடுத்த சுப உப்பளவாடியில் கடற்கரை பகுதி உள்ளது. இங்கிருந்து சுமார் 300 மீட்டரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதற்கான சாலை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடல் நீர் ஊருக்குள் வராமல் தடுக்க இரண்டு ஏக்கருக்கு மேல் சவுக்கு மரங்களும், கடற்கரை ஓரமாக பனை மரங்களும் வனத்துறை சார்பில் நடப்பட்டன. கடல் சீற்றத்தின் காரணமாக கடல்நீர் முன்னோக்கி வந்ததால் கடற்கரை ஓரமாக அமைக்கப்பட்டிருந்த சாலைகள் அடித்து செல்லப்பட்டன. மேலும், பனை மரங்களும் சவுக்கு மரங்களும் அடியோடு சாய்தால் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.