சிதம்பரம், டிச.9- மாண்டஸ் புயல் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து சிதம்பரம் உதவி ஆட்சி யர் அலுவலகத்தில் ஆட்சியர் பால சுப்பிரமணியம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. உதவி ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் ஹரி தாஸ், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் காந்தரூபன், குமார் நகராட்சி ஆணையர் அஜிதா பர்வீன், பரங்கிப்பேட்டை, கிள்ளை, அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், கும ராட்சிகளின் செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் காவல் துறை யினர் கலந்து கொண்டனர். கடலூரை நோக்கி புயல் நகரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து துறை அலுவலர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.