கடலூர்,டிச.9- வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தங்களது படகுகள் அனைத்தையும் கரையோரமாக நிறுத்த வைத்துள்ளனர். வழக்கத்தைக் காட்டிலும் கடலில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 14 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.