கடலூர், ஏப். 28- கடலூர் மாவட்டத்தில் மாட்டுவண்டிக்கு தனி மணல் குவாரி திறக்கக் கோரி கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிஐடியு மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் அறிவித்த 21 மாட்டுவண்டி மணல் குவாரியை லாரி மணல் குவாரியாக மாற்றியதைக் கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் உடன டியாக வானமாதேவி, அக்கடவல்லி, கருக்கை, கிளியனூர், கோ ஆதனூர், கூடலையாத்தூர், ஆதியூர், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டிக்கு என தனியாக மணல் குவாரி அமைக்க வேண்டும், காவல்துறையால் கைப்பற்றப் பட்டுள்ள மணல் மாட்டு வண்டிகளை விடு விக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தினர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து பேரணியாகச் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை, வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் பி.கருப்பையன் தலைமை தாங்கினார். மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.திரு முருகன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனிவேல், மாநிலக் குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் வி.சுப்புராயன், ஏ.பாபு, துணைத்தலைவர்கள் எஸ்.சாந்தகுமாரி, எஸ்.சங்கமேஸ்வரன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், பொன்னம்பலம், செல்வராஜ், விசுவநாதன், சுந்தரமூர்த்தி, ராமலிங்கம், சிவப்பிரகாசம், ரங்கநாதன், ரத்தினவேல், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.