districts

img

ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

கடலூர், டிச. 17- கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் கால்வாய் அமைத்து தராத ஊராட்சி நிர்வா கத்தை கண்டித்து கிராம மக்கள்  வேப்பூர் - பெண்ணாடம் சாலையில் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அந்த மக்கள் கூறுகையில், “முறையாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் குடியி ருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி  நிற்கிறது. இதில் கொசு உற்பத்தி யாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடி யாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்”என்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி மற்றும் ஆவினங்குடி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஊராட்சி நிர்வாகம் உடனடி யாக அதற்கான பணிகளை துவங்க  நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர். இதையடுத்து அனை வரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.