districts

img

கடலூரில் துப்பாக்கிய ஏந்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு

கடலூர்,பிப்.26- கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அடிக்கடி கலவரம், கொலை நடந்து வருவதால் துப்பாக்கி ஏந்திய அதிவிரைவு படையினர் துப்பாக்கிகளுடன் கொடி அணி வகுப்பு நடத்தினர்.  கடலூர் சோனாங்குப்பம் சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்ச நாதன் 2018 ஆம் ஆண்டு தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஒரு கும்பல் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 4 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படு கிறது.  இதன் காரணமாக தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடலூர் திருப்பாதிரிப் புலியூர் குப்பன் குளம் மற்றும் கம்மியம்பேட்டை பகுதியில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கொலைகள் நடைபெற்று வரு கின்றது. இதன் காரணமாகவும் இந்த பகுதியில் அவ்வப்போது பதட்டம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய அதிவிரைவு படையினர் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதி யில் கொடி அணிவகுப்பு நடத்தி னர். அப்போது, கைகளில் துப்பாக்கிகளையும ஏந்தி சென்றனர். அப்போது அங்கி ருந்த பொதுமக்கள் இதனை அச்சத்துடன் பார்வையிட்டனர்.