கடலூர், நவ.21- கடலூர் தேவனாம்பட்டி னத்தில் அரசு பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு பொது நிர்வாகத் துறை 3ஆம் ஆண்டு மாண வர்கள் திங்களன்று (நவ. 21) வகுப்பை புறக்கணித்து கல்லூரி வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் துறைக்கு பேராசிரியர்கள் இல்லை. மேலும் 4ஆவது செமஸ்டர் தேர்வு நடை பெற்ற மதிப்பெண் பட்டியல் வெளியிடவில்லை. இதன் காரணமாக எங்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகி உள்ளது. இதனை கண்டித்து வகுப்பு புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே கல்லூரி நிர்வாகம் போதிய பேராசியர்களை நியமிக்க வும், மதிப்பெண் பட்டியலை வெளியிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்தனர்.