districts

img

கடலூர் குடியிருப்போர் சங்கம் நடத்திய மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா

கடலூர், ஜன. 14- கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா செம்மண்டலம் தீப நகர் பூங்காவில் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன், தீபன் நகர் தலைவர் கோபால் ஆகியோர் தலைமை தாங்கினர். புரு ஷோத்தமன், ஆறுமுகம், சிவபெருமான் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் எம்.மருதவாணன் வரவேற்றார். விழாவில், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாமன்ற உறுப்பினர் செல்வ.புஷ்பலதா, மூத்த வழக்கறிஞர் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். நடராஜன் நன்றி கூறினார். வண்ண கோலமிட்டும், பூக்களால் அலங்க ரித்தும், கரும்பு தோரணங்களாக கட்டி வைத்தி ருந்ததால் களைக் கட்டிய இந்த பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கொண்டாடினர். இதில் சிலம்பாட்டம், கராத்தே போட்டி, பரத நாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன.

;