districts

img

இயற்கை வேளாண் உணவு பொருட்கள் கண்காட்சி

சிதம்பரம், டிச.22- சிதம்பரம் மேல வீதியில் உள்ள கஸ்தூரிபாய் நிறு வனம் மற்றும் என்.எம்.பி ரெடிமேட்ஸ் நிறு வனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினத்தை யொட்டி உரம் மற்றும் மருந்து தெளிக்காமல் பாரம்பரியமான இயற்கை முறையில் விவ சாயம் செய்யும் விவசாயி களை அடை யாளம் கண்டு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கவுரவிக்கும் பணி களை மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 23 விவசாயிகள் தினத்தை யொட்டி பாரம்பரிய நெல், உணவு பொருட்கள், அரிசி வகைகளை கடந்த 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் கண்காட்சி நடை பெறுகிறது. இந்த கண்காட்சியை கஸ்தூரிபாய் நிறுவன உரிமையாளர் முத்துக் குமரன் தொடங்கி வைத்தார். இதில் குறிப்பாக ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய அரிசிகளான கருப்பு கவணி, கருங்குருவை, அறுபதாம் குருவை, காட்டுயானம், பூங்கார். தூயமல்லி,  சொர்ண மசூரி, ஜீரக சம்பா போன்ற 15க்கும் மேற்பட்ட அரிசி வகைகள், மேலும் அரிசியை மதிப்புக்கூட்டி  சூப் மிக்ஸ், இடியாப்ப மாவு, முறுக்கு மாவு, உப்புமா ரவை, அவல், இயற்கை லாலி பாப் இயற்கை லட்டு உருண்டை, பீர்க்கங்காய் சாண்ட்விச் போன்றவை இடம்பெற்றுள்ளன. இயற்கை முறையில் தயார் செய்த சமைக்காத காய்கறி உணவு வகைகளையும் அவர்கள் கண்காட்சிக்கு வரும் பொது மக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இயற்கை பாரம்பரிய உணவுப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்க ளுக்கு இயற்கை வேளாண் விவசாயிகள் சிவக்குமார், விஜயலட்சுமி, சுரேஷ்குமார், வீராணம் ஏரி ராதா மதகு வாய்க்கால் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் ரங்க நாயகி, விவசாயிகள் கோடி சுந்தரம், சங்கரா, அன்பர சன், பரத், ஸ்டாலின், சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.