districts

img

பயிர் காப்பீடு திட்டத்தில் தனியாரை அனுமதிக்க எதிர்ப்பு

கடலூர்,அக். 26- பயிர் காப்பீடு திட்டத்தில் நடை பெற்ற மோசடியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பயிர் காப்பீடு செய்து பாதிக்கப் பட்ட அனைத்து விவசாயிக ளுக்கும் பாரபட்சம் இன்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டு துறை யில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது, பல்லா யிரக்கணக்கான விவசாயிகள் சேரும் பயிர் காப்பீடு திட்டத்திற்கான மாவட்ட அலு வலகத்தை கடலூரில் அமைக்க வேண்டும். 22 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் தலைமை தாங்கி னார். மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், துணைத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி, இணைச் செயலாளர் பி.கற்பனைச் செல்வம், ஆர்.லோகநாதன், பழ.வாஞ்சிநாதன், நிர்வாகிகள் எம்.கடவுள், வெங்கடேசன், மெய்யழகன், ெஜகதீசன் பாரி சர்க்கரை ஆலை சங்கத்தின் செயலாளர் தென்னரசு, எம்.ஆர்.கே.ஆலை இயக்குநர் ஆதிமூலம், செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.