districts

img

தென்பெண்ணையாற்றங்கரையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு

கடலூர்,ஜன. 4- கடலூர் மாநகராட்சியின் குப்பை கிடங்கு கிராம பகுதியில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட இடவசதி இல்லை. மேலும் தற்போது குப்பைகளை ஆற்று பகுதிகளில் கொட்டுவது மற்றும் தீ வைத்து கொளுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலை யில் மாநகராட்சி சார்பில் கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் ஊராட்சி பகுதியில் 47 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதை அறிந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகிய நத்தம், இரண்டாயிரவிளாகம், நத்தப்பட்டு, முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம் ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். கடலூர் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் தென்பெண்ணையாறு உள்ளது. ஆகவே தென்பெண்ணை யாற்றங்கரையோரம் உள்ள வெள்ளப் பாக்கத்தில் குப்பை கிடங்கு அமைத்தால், குடிநீர் மாசுபட்டு மக்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே சுகாதாரத்தை பாதிக்கும் குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஏற்கனவே பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் புதனன்று ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக் களத்திற்கு சென்று கோட்டாட்சியர் அதியமான் கவியரசு நடத்திய பேச்சுவார்ததையில் இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கப்படாது என்று அளித்த உறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.