districts

img

கடலூரில் பாலர் சங்கம் சார்பில் பாரதி சிலைக்கு மாலை அணிவிப்பு

கடலூர்,டிச.11-  பாலர் சங்கத்தின் சார்பில் கடலூரில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மகாகவி பாரதியாரின் 140 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாலர் சங்கம்  சார்பில் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாரதியார் சம்பந்தமாக குழந்தை களுடன் உரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாலர் சங்கத்தின் மாவட்ட தலை வர் ஹரிஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி யில் பாலர் சங்கத்தின் மாநகர தலைவர் மைலேஷ், மாநகர செயலாளர் கீரிவாசன், மற்றும் சந்தோஷ், சரத், பங்கேற்றனர். பாரதி யாரைப் பற்றி குடியிருப்போர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.மருதுவாணன் உரையாற்றினார். கடலூர் பாரதி சாலையில் மகாகவி பாரதியாருக்கு சிலை வைக்க வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெற்றி  பெற்ற பாலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.அமர்நாத், டி.எஸ்.  தமிழ்மணி, சாந்தகுமாரி, புவனேஸ்வரி, தேவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.