கடலூர், பிப். 13- விற்பனைக்குழு தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர சிறுகடை தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கடலூர் மாவட்டத்தில், சாலையோர வியாபாரி களை விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி அடை யாள அட்டை வழங்க வேண்டும், சாலை வியா பாரிகள் சங்கத்தின் ஆலோ சனையை பெற்று விற்பனைக்குழு கணக் கெடுப்பு நடத்த வேண்டும். விற்பனைக்குழு தேர்தலை உடனே நடத்த வேண்டும், நகர விற்பனை குழுவில் 15 பேரில் ஆறு பேர் சாலை வியாபாரிகள் என்பதை மூன்றில் இரண்டு பங்கு என மாற்றம் செய்ய வேண்டும், சாலை யோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் தள்ளு வண்டிகளை விற்பனைக் குழு சாலை வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசனை கேட்டு முறைகேடு இல்லா மல் வழங்க வேண்டும், கந்துவட்டி கொடுமையில் இருந்து மீள கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், செயலாளர் டி.பழனிவேல், இணைச் செயலாளர் ஜெ.ராஜேஷ் கண்ணன், ஸ்டாலின், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சங்க மேஸ்வரன், தலைவர் சுரேஷ், பொருளாளர் இதயத்துல்லா, மாநகரச் செயலாளர் சுந்தரமூர்த்தி, நகரச் செயலாளர் உதய குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.