districts

மீனவர்கள் கிராமத்திற்குள் ஏற்பட்ட மோதல்-கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

கடலூர்,மார்ச் 4- கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் மீன வர்களுக்கு முன் விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலை யில் கடந்த 2018 ஆம் ஆண்டில்  இவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டு கடலில் தாக்கிக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக சோனங் குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் தேவ னாம்பட்டினம் மீனவர்களால் கொல்லப்பட்டார். இதில் மேலும் 3 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் துறைமுகம் காவல்துறையினர் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தினகரன் வழக்கு விசாரணையில் இருந்த போது இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 16 அன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது மார்ச் 4 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப் பட்டது.  இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர் நீதி மன்ற வளாகம், தேவனாம்பட்டி னம், சோனாங் குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஏராள மான காவலர்கள் குவிக்கப் பட்டிருந்தனர். இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுபா அன்புமணி வருகிற 8 ஆம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தார். மேலும் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஏராளமான காவலர்கள் ஆங்காங்கே ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.