districts

img

நந்தனார் நுழைவு வாயில் பூட்டை உடைத்த வாலிபர்

சிதம்பரம், நவ. 24- சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் அருகே நந்தனார் நுழைந்த வாயில் என்று கூறுப்படும் வாயிலை தீட்சிதர்கள் அடைத்து வைத்துள்ளனர். இதனை திறக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். இந்நிலையில், இரும்புக் கம்பியால் பூட்டப்பட்டிருந்த நந்தனார் வாயில் கதவின் பூட்டை புதன்கிழமை  (நவ.23) இரவு வாலிபர் ஒருவர் உடைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீட்சிதர்கள் சிதம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிதம்பரம் கனக சபை நகரை சேர்ந்த ஆனந்த் (30) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் கூறுகையில் தான் நந்தனார் மீது பற்று கொண்டவர் என்றும், இந்த வாயிலை தீண்டாமை என பூட்டி வைத்துள்ளனர். இதை உடைத்து மக்களுக்கு நல்லதுதானே செய்துள்ளேன். இந்த தீண்டாமைச் சுவர் நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். நான் செய்தது தவறு என்றால் நடராஜர் என்னை தண்டிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.