districts

img

மழை நீர் சூழ்ந்துள்ளதை குடியிருப்புகளை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வை

சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டம், கீழ குண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் .பாலசுப்ரமணியம், சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவி, சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், வட்டாட்சியர் அரிதாஸ் ஆகியோர் இருந்தனர்.