கடலூர், ஜுன் 24- கடலூர் மாவட்டம், திருச்சோபுரத்தில் நீர்வளத் துறை சார்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் வடிநிலக் கோட்டம் அருவாள்மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் முன்னிலையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச் சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கடலூர் மாவட்டம், கீழ்பரவானற்றில், அருவாள்மூக்கு எனும் இடத்தில் தடுப்பணை கட்டி, அங்கிருந்து ஒரு புதிய கால்வாய் வெட்டி 1.60 கி.மீ. தொலைவில் உள்ள கடலில் எளிதில் வெள்ள நீரை வடிய வைக்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.81.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துவங்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவேற்றப்படும் பட்சத்தில் பரவனாற்றில் மழை காலங்களில் வெள்ளம் எளிதில் வடிய வைக்கப்படுவதோடு, அதனை சுற்றியுள்ள சுமார் 15,600 ஏக்கர் விளை நிலங்கள் வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்,
இதனை சுற்றியுள்ள 24 கிராமங்களின் மக்கள் மற்றும் கால்நடை கள் பாதுகாக்கப்படுவதோடு, இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் 39 குடும்பங்களும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்த அந்த மாற்று மனைக்கான ஆணை அவர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் என்எல்சி இந்தியா நிறுவனத் தின் திருத்தி அமைக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு கொள்கையின்படி அந்த மாற்று மனையில் வீடு கட்டிக் கொள்வதற்காக ஒவ்வொரு குடும்பத்திற் கும் ரூ. 25 லட்சத்து முப்பதாயிரம் வீதம் 39 குடும்பங்களுக்கு ரு.9.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜ சேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ருத்ரைய்யா, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, செயற்பொறியா ளர் நீர்வளத்ததுறை காந்தரூபன் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிகள் கலந்துகொண்டனர்.