districts

img

கடலூரில் மாதர் சங்க மாநில மாநாடு: வரவேற்பு குழு அலுவலகம் திறப்பு

கடலூர், செப். 9- அனைத்திந்திய ஜன நாயக மாத சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் கட லூரில் நடைபெறுகிறது.  இதற்கான வரவேற்பு குழு அலுவலக திறப்பு விழா மாவட்டத் தலைவர் பி.மல்லிகா தலைமையில் நடைபெற்றது.  சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி அலுவலகத்தை திறந்து வைத்தார்.  மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, வரவேற்பு குழுச் செயலாளர் பி.தேன் மொழி, வரவேற்புக் குழு பொருளாளர் எம்.மருத வாணன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கோ. மாதவன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.சுப்புராயன், பாரதி புத்தக காலத்தின் கன்வீனர் ஜே.ராஜேஷ் கண்ணன், மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பாளர் ஆர்.அமர்நாத், மாநிலக் குழு உறுப்பினர் வி.மேரி, மாவட்டச் செயலாளர் பி.மாதவி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.கே.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;