districts

கடலூர் மத்திய சிறையில் கைதி திடீர் சாவு

கடலூர், ஜன. 28- கள்ளக்குறிச்சி வேங்கைவாடியைச் சேர்ந்தவர் குருசாமி (43). இவர் கடந்த 2018ஆம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்த வழக்கில் கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை காலை குருசாமிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து குருசாமியை சிகிச்சைக்காக சிறை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அப்போது குருசாமிக்கு முதலுதவி  செய்து, மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குருசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.