கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின பொன் விழாவை கொண்டா டிய நேரத்தில் அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்தீப் சக்சேனா சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பட்டியலிட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். அதில் 211 சுதந்திரப் போராட்டதியாகிகளின் வரலாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் அஞ்சலையம்மாவும் அவருடைய மகள் லீலாவதி ஆகியோரின் தியாகம் குறிப்பிடப்பட்டிருப்பது பாராட்டுக்குரி யது. ஆனால் அதே நேரத்தில் இடது சாரி சிந்தனையோடு இந்த நாட்டு விடுதலை க்காக போராடிய நெல்லிக்குப்பம் சி.கோவிந்தராஜன், மாதர் சங்க தலை வராக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல போராட் டங்களை நடத்திய மகத்துவமிக்க தலை வர் ஷாஜாதி கோவிந்தராஜன் குறித்தும் அதில் இடம் பெறவில்லை. நாடு முழுவதும் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய தலை வர்கள் சுசிலா கோபாலன், கேப்டன் லட்சுமி, அகல்யா ரங்கநாயக்கர், விமலா ரணதிவே போன்ற பல தலைவர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. மண்ணின் உரிமை யோடு பெண்ணின் உரிமைக்காக போரா டிய சுதந்திரப் போராட்ட தியாகிகள் பாப்பா உமாநாத், கே.பி.ஜானகியம்மாள் ஆகியோர் இணைந்து 1973இல் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவினர்.
மாதர் சங்கம், தமிழகத்தில் ஏராளமான போராட்டங்களை நடத்தி பெண்களின் பாதுகாப்பு கேடயமாக திகழ்ந்து கொண்டி ருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் தீர்த்தம் பாளையத்தில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனையை சங்கம் பெற்றுக் கொடுத்தது. கீரப்பாளையம் சாக்கான்குடியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. குற்றவாளியின் ஊருக்கே சென்று இயக்கம் நடத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது மாதர் சங்கம். விருத்தாசலம் தாலுகாவில் பொன்னு ருவி மேலப்பாளையம் சகுந்தலா ஆகிய தலித் இளம் பெண்கள் பாலியல் வல்லு றவு செய்யப்பட்டு படுகொலை செய்யப் பட்ட சம்பவத்திலும், திட்டக்குடி பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கிலும் 36 குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்பட்டது.
கடலூர் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு, காட்டுமன்னார்குடி இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு, நெய்வேலி வரத ட்சணை கொலை, முத்தாண்டி குப்பம் காவல் நிலைய படுகொலை, குமராட்சி பள்ளியில் மாணவி சந்தேக மரணத்திற்கு நீதி வேண்டும் என 100க்கும் மேற்பட்ட வழக்குகளில் தலையிட்டு மாதர் சங்கம் நீதியை பெற்றுக் கொடுத்தது. விருத்தாசலம் சுலோச்சனா வரதட் சணை கொலை வழக்கில் தலையிட்ட தற்காக தலைவர்கள் மீது தாக்குதல், நெய்வேலி சாதி மறுப்புத் திருமண தம்பதியர்களுக்கு ஆதரவளித்ததற்காக மாநிலத் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் என பல்வேறு தாக்குதல்கள் வந்த போதும் உறுதிமிக்க போராட்டத்தை நடத்தி பெண்களின் பாதுகாப்புக் கேடயமாக செயல்பட்டு வந்ததுள்ளது. சங்கத்தை உருவாக்கிய பாப்பா உமாநாத், தமிழகத்தில் கால்பதிக்காத மாவட்டமே இல்லை. எங்கெல்லாம் பெண்கள் மீதான வன்முறைகள் நடை பெறுகிறதோ அங்கெல்லாம் முதல் போராளியாக நின்று குரல் கொடுக்கக்கூடிய மகத்துவமிக்க தலைவராக செயல்பட்டவர். இந்த மாவ ட்டத்தினுடைய தலைவர்களாக ஷாஜாதி கோவிந்தராஜன், பா.ஜான்ஸிராணி போன்றவர்கள் முதல் மாநில நிர்வாக குழு விலும், மாநில குழுவிலும் இடம் பெற்று தமிழகத்தின் தலைவர்களாக உயர்ந்த வர்கள். இதனால் மாதர் சங்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக கடலூர் மண் திகழ்கிறது. - எஸ்.வாலண்டினா மாநில தலைவர்